Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு 

டிசம்பர் 02, 2023 12:58

திருச்செங்கோடு: நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக வனத்திற்குள்  திருச்செங்கோடு எனும் திட்டத்தின் கீழ் வாளரைகேட் முதல் நாமக்கல் ரோடு வரையிலான கிரிவல பாதையில் நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை, வனத்துறை, மற்றும் நெடுஞ்சாலை துறை இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்வு துவங்கப்பட்டது, 

இதில் முதல் கட்டமாக 200 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது நிகழ்வை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி மரக்கன்றுகள் நட்டு வைத்து நிகழ்வை துவங்கி வைத்தார். 

நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்